Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்

நேர்மையாக சொல்கிறேன். நான் இங்கே இந்த படத்தின் உள்ள குறைகளை மட்டுமே பேச 
போகிறேன். நேரமிருந்தால் நிறைகளை கொஞ்சம் சொல்கிறேன்.படத்தின் முதல் காட்சியிலேயே
சூர்யா.. கிழ சூர்யா. கொஞ்சம் உற்று பார்த்தால் முகத்தில் மட்டும்தான் சுருக்கம். கைகள் 
எல்லாம் நன்றாக தெனவெடுத்த சிக்ஸ் பேக் சூர்யா வின் கை போன்று தான் உள்ளது. 

வயசான சிம்ரன் சாபிடுவது போன்ற ஒரு சீன். அந்தக் காட்சியை எடுப்பதற்கு முன் வெகு நேரம் 
சிம்ரன் பசியில் இருந்திருக்க வேண்டும். ஏன் இப்பிட் அவக் அவக் என்று சாப்பிடுகிறாரோ தெரியவில்லை. 
வயதான தோற்றத்திற்கும் அவர் சாப்பிடும் தோரனைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.   

படத்தில் எண்பதுகளில் நடப்பது போன்ற சில காட்சிகளும் உள்ளன. அதுதான் இருப்பதிலேயே 
கொடுமைடா சாமி. அதற்கு தேவையான பொருட்களையெல்லாம் அவசர அவசரமாக எதோ 
கண்காட்சி அல்லது பொருட்காட்சியில் இருந்து எடுத்து வந்திருக்கிறார் போலும். அதே போல் 
சிம்ரன் முக சுருக்கங்களையும் கவனிக்க தவறி விட்டனர். அவசரமான மேக்கப். பழைய 
காலத்தில் ஸ்பென்சர் கம்பெனியின் முன்னால் நடந்து வருவதைப் போன்ற ஒரு காட்சி. அதில் 
பில்டிங் உயரத்திற்கே ஆட்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. ஒன்றிரண்டு 
விநாடிகள் மட்டும் வருவதால் அநேகம் பேர் அதனை கவனித்து இருக்க மாட்டர்கள். மட்டமான 
கிராபிக்ஸ். சிம்ரன் முகத்தில், நெற்றியில் ஒரே ஒரு கோடு குறுக்கு வாட்டில் வரைந்து வைத்து 
வயதான தோற்றம் என்று சொல்கிறார்கள். புருவத்திற்கும் தலைக்கும் கொஞ்சம் வெள்ளை கலர் 
அடித்து விட்டு லைட்டாக தொப்பைக்கு துணியையும் வைத்து கிழ சூர்யா என்கிறார்கள். மேக்கப் 
மேனுக்கு என்ன அவசரமோ.   

கிழ சூர்யா யாரையாவது பார்த்துவிட்டு திரும்பும்போது பேரழகனில் வரும் அதே லுக் கண்களில் 
வருகிறது. கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.  ஒரு நான்கைந்து வெவ்வேறு படங்களை பார்ப்பது 
போன்ற உணர்வு. சூர்யா சென்னை. சூர்யா அமெரிக்கா, சூர்யா திவ்யா, அப்புறம் சூர்யாவும் 
அந்த பொம்பளை போலீஸ் மாதிரி இருக்கே, ட்ரெயின்ல பாத்த அந்த பொண்ணு. அவங்க காதல், 
சூர்யா போதை அடிமை, சூர்யா ஸ்ரீ நகர், சூர்யா ராணுவ வீரன். இதில் திவ்யா அவரை பதினைந்து 
வயதில் இருந்தே காதலித்துக்கொண்டு இருந்ததாம்.  இப்படி நிறைய படங்கள். ஹா...வ்...  படத்தில் 
எல்லாருடைய டயலாக் டெலிவரி ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கிறது. அதாவது மாடுலேசன். 
வார்த்தை வார்த்தையாய் பேசுகிறார்கள். அது நான்.. போனேன்... காதல்... டாடி டாடி... சாம்பிராணி... 
சூர்யா... திரும்பி வந்துடு... என்று ஆளை விடுங்கப்பா...

போதாக்குறைக்கு கௌதம் மேனனே பத்தில் ஏழு பேருக்கு டப்பிங் கொடுத்திருப்பது வேறு...  
படத்தின் மிகப்பெரிய குறை அதிகமான ஆங்கில வசனங்கள். ஹிந்தி வசனங்கள். பி, சி சென்டர் 
பற்றி கவலையே படவில்லை போல. ஆனால் ஒரு படத்தின் தலைஎழுத்து இந்த செண்டர்களில்தான் 
நிர்ணயிக்கப்படுகிறது என்பதை டைரடக்கர் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லை.. 
நானேதான் அப்படி எழுதினேன்) எப்பொழுது உணர்ந்து கொள்வாரோ. படத்தின் பெயர் மட்டும் தான் 
தமிழில். (இதற்கு வரிவிலக்கே கொடுத்திருக்க கூடாது. குறைந்த பட்சம் 75  சதவீத டயலாக்குகலாவ்து தமிழில் 
இருக்க வேண்டும், அப்போதுதான் வரிவிலக்கு என்று திருத்தம் செய்ய வேண்டும்)  இந்த 
படத்திற்கு பெண்கள் கூட்டம் தான் நிறைய வரும். எனேன்றால் படம் ஒரு மினி நெடுந்தொடர் போல 
உள்ளது. குறைகள் இன்னும் நிறைய இருக்கிறது.   இந்த படத்தின் திரைக்கதை எந்த படத்தினுடைய தாக்கத்தை 
கொண்டுள்ளது என்பதை சினிமாவைப் பற்றி அறிந்தவர்கள் தெரிந்திருப்பார்கள். கமல்ஹாசனை போல் 
திரைக்கதை அமைக்க இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்.   

ம்ம். நிறைகளா... ... சூர்யா அழகாக இருக்கிறார். எனக்கு அருகில் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருந்த  
பாட்டி சொன்னது "இவன் எவ்வளவு அழகா இருக்கான்!". அப்புறம் டைரக்டர் கௌதம் மேனன் 
தனது பெர்சனல் வாழ்க்கையில் ஒவ்வொரு  விஷயத்தையுமே ரசித்துக்கொண்டே இருப்பார் போல. 
ஏனெனில் அவர்களைப் போன்றவர்களால் தான் படத்தில் வரும் சில காட்சிகளை எடுக்க முடியும். 
ஸ்ரீ நகரில் ஒரு வீட்டில், சுட சுட தேநீர்... படகு சவாரி, பனிமலைகள், பச்சை புல்வெளிகளில் படுத்து 
உருள்வது, அப்புறம் சில இடங்கள்.... பாடல்கள் சில அருமை. வரிகளும் அற்புதம். 

படம் முடிந்து வெளியே வந்ததும் பின்வரும் சில மாற்றங்களை நீங்கள் உணரக்கூடும்.
1. உள்ளே செல்லும் பொது நீங்கள் பார்த்த நாய் வெளியே வரும்போது பெரியதாக வயதாகி இருக்கும்.  
2. உள்ளே செல்லும் பொது பாதி வளர்ந்திருந்த கட்டிடங்கள் ஏதேனும் இருந்தால் வெளியே வரும் 
பொது அது முழுமையடைந்து பயன்பாட்டிருக்கு வந்து கொஞ்சம் அழுக்கும் ஏறியிருக்கும்.  
3. உங்கள் தாத்தாவோ பாட்டியோ மண்டையை போட்டிருப்பார்கள்.  
4. எச்சரிக்கை. கண்ணாடியில் உங்களை நீங்களே பார்க்கும்பொழுது அடையாளம்   கண்டுபுடிக்க முடியாது.  
5. இன்ன பிறவற்றை எச்சரிக்கை உணர்வு கொண்டு நிறுத்திக்கொள்கிறேன்.  
6. மொத்தத்தில் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆறேழு வயது அதிகமாகியிருக்கும்.  
7. இருந்தாலும் அப்பானா இவர மாதிரிதான் இருக்கணும்னு எல்லா இளைஞர்களையும் நினைக்க 
வைப்பதே இந்த படத்தின் வெற்றி.  
8. மொத்தத்தில் வாரணம் ஆயிரம் - கொட்டாவி.   

ம்ம்.. எது எப்டி இருந்த என்ன, லைஃப் ஹேஸ் டு கோ.
-- புண்ணாக்கு

No comments: